×

சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சிவாஜி கிருஷ்ண மூர்த்தி இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை :

சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கழகத் தலைவரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Northern District ,Administrator ,Chennai ,Secretary General ,Duraimurugan ,Shivaji Krishna Murthy ,Dimuka ,Shivaji Krishnamoorthy ,of ,Northern District Administrator of ,Dinakaran ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...