×

பெரம்பலூரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

பெரம்பலூர்,பிப்.10: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை போலீசார் ஏற்றனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புதின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி எஸ்பி அலுவலகத்தில் உள்ள அனைத்து காவல் துறையினர் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி சமுதாயத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன் பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்துவதை தடுக்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

The post பெரம்பலூரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,SP ,SHYAMLA DEVI ,PERAMBALUR DISTRICT ,Perambalur District SP ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 400 மது பாட்டில்கள் பறிமுதல்