×

சேரன்மகாதேவியில் இளம்பெண் உயிரிழப்பு

 

வீரவநல்லூர், பிப்.11: கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் அருகே நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மீனா (21). இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் மீனாவிற்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின் கடந்த மாதம் மீனாவை அவரது கணவர் நாவல்காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மீனாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மீனாவிற்கு திருமணம் முடிந்து 6 மாதமே ஆகியுள்ளதால் இவ்வழக்கு ஆர்டிஓ விசாரனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

The post சேரன்மகாதேவியில் இளம்பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Seranmagadevi ,Weeravanallur ,Murali ,Navalgadu ,Eesanthimangalam ,Kanyakumari district ,Meena ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...