×

காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

கூடுவாஞ்சேரி: காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பிக்கள் பங்கேற்றனர். இதில் பாஜ பெயரை பயன்படுத்தாமல் அதிமுக எம்பிக்கள் பேசினார்கள்.  செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கடந்த 2016-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி மாபெரும் தெருமுனை பிரச்சார கூட்டம் காயரம்பேடு கூட்ரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காயாரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சொக்கலிங்கம், சேகர், சுரேஷ், தேவராஜன், சரவணன், சங்கரி ஆனந்தன், முருகம்மாள் ஜெயராமன், கோவிந்தராஜன், உமாபதி, வளர்மதி, அருள்தாசன், வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்பி கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத், ஒன்றியச் செயலாளர் சம்பத்குமார், தலைமை பேச்சாளர் போதிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்தனர். இதில் பாஜ பெயரை பயன்படுத்தாமல், திமுக ஆட்சியை மட்டுமே குறை கூறி முன்னாள் எம்பிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பேசினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி திருவாக்கு நன்றி கூறினார்.

The post காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Koodrod, Kayarambedu ,Guduvanchery ,Kayarambedu Koodrod ,BJP ,Chengalpattu ,West District ,Kattangolathur East Union AIADMK ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...