×

ரத்தினமங்கலம் சாலையில் போலீஸ் பூத் அமைக்கும் பணி தீவிரம்: விரைவில் திறப்பு விழா

கூடுவாஞ்சேரி: குற்றங்களை தடுப்பதற்காக கூடுவாஞ்சேரி அருகில் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரத்தினமங்கலம் சாலையோரம் போலீஸ் பூத் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தாழம்பூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ரத்தினமங்கலம், நல்லம்பாக்கம், கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி நடந்து வரும் குற்ற சம்பவங்களையும், விபத்துக்களையும் தடுப்பதற்காக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள ரத்தினமங்கலத்தில், தனியார் மருத்துவமனைக்கு திரும்பும் முகப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் பல லட்சம் மதிப்பில் போலீஸ் பூத் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைக்க உள்ளார். இதில் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் நேரில் வந்து புகார் கொடுக்கலாம். 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாழம்பூர் காவல் நிலையத்திற்கு சென்று பொதுமக்கள் புகார் கொடுத்து வந்த நிலையில், தற்போது ரத்தினமங்கலத்தில் அமைக்கப்பட்டு வரும் போலீஸ் பூத்திலேயே புகார் கொடுக்கும் வசதி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே வேங்கடமங்கலம் மற்றும் மேலக்கோட்டையூர் ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ரத்தினமங்கலம் சாலையில் போலீஸ் பூத் அமைக்கும் பணி தீவிரம்: விரைவில் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Rathinamangalam Road ,Guduvanchery ,Dhalampur ,Guduvancheri ,Dhalampur Police ,Tambaram Metropolitan Police ,Rattinamangalam Road ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...