×

பேருந்து நிலையத்தில் முதியவர்களிடம் ஏடிஎம் கார்டு, செல்போனை திருடி பணம் கொள்ளை: மதுரை பெண் சிக்கினார்

தண்டையார்பேட்டை: திருவொற்றியூரை சேர்ந்தவர் சரண்யா (27). கடந்த மாதம் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவரது பை மாயமானது. இதேபோன்று புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரேமா (32) பர்ஸ் திருடு போனது. பர்சில் 2 வெள்ளி கொலுசுகள், மெட்டிகள் வைத்துள்ளார். புகாரின்படி வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், சரண்யாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அவரது செல்போனுக்கு வந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை சிமென்ட்ரி சாலை சந்திப்பு அருகே உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு வந்ததை ரோந்து போலீசார் பார்த்தனர். சந்தேகத்தில் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

விசாரணையில், மதுரையை சேர்ந்த திவ்ய பிரியா என்ற அஞ்சலி (35) என்பதும், கடந்த 3 மாதங்களாக சென்னை தங்கசாலை பேருந்து நிலையத்தில் முதியவர், மூதாட்டிகளிடம் நைசாக பேசி மணிபர்ஸ், தங்க நகை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருடி, ஏடிஎம் கார்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள ரகசிய நம்பரை வைத்து பணத்தை திருடியதும், செல்போன், வெள்ளி பொருட்கள் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட திவ்யபிரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பேருந்து நிலையத்தில் முதியவர்களிடம் ஏடிஎம் கார்டு, செல்போனை திருடி பணம் கொள்ளை: மதுரை பெண் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Saranya ,Tiruvottiyur ,Vallalar Nagar ,Prema ,Puduvannarappet ,
× RELATED அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா...