×

நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு முகாம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு முகாமில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நான் முதல்வன் வேலைவாய்ப்பு அமைப்பு ஆகியன இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு முகாமை நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் நடத்தியது.

கல்லூரி தமிழ்துறை தலைவர் கோலப்பதாஸ் வரவேற்றார். கல்லூரி செயலர் குமாரசாமி தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணியன், உதவி பயிற்சி அலுவலர் ஜெயசிங், சுயநிதி பிரிவு இயக்குநர் நீலமோகன் ஆகியோர் பேசினர். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி செல்வகணபதி அறிக்கை வாசித்தார். தமிழ்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 58 நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். 4 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

The post நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு முகாம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Skills Development Club ,Camp ,Nagercoil ,NAGARGO ,SKILLS DEVELOPMENT CLUB EMPLOYMENT CAMP ,NAGARGOV ,Tamil Nadu Skills Development Corporation ,I Mudhalvan Employment Organization ,Bionier Kumarasamy College ,Nagarko ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு