×

தப்பி ஓடிய கைதி விஷ காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி..!!

தேனி: போக்சோவில் 20 ஆண்டு தண்டனை பெற்ற கைதி தப்பியோடி பிடிபட்ட போது விஷ காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கம்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரை கடந்த 1ம் தேதி மற்றொரு வழக்கில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது தப்பி ஓடினார். தனிப்படை போலீசார் தம்மை சுற்றி வளைத்துவிட்டதை அறிந்த விஜயகுமார் அரளிக்காயை தின்று தற்கொலைக்கு முயன்றார். தேனி அரசு மருத்துவமனையில் கைதி விஜயகுமார் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post தப்பி ஓடிய கைதி விஷ காய் சாப்பிட்டு தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Pocso ,Vijayakumar ,Kampam ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்