×

குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, பிப். 10: பாளை. சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்த சந்தனம் மகன் சுப்பிரமணியன் (41). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ஒரு வழக்கில் தாழையூத்து போலீசார் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்பி சிலம்பரசன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின் பேரில், சுப்பிரமணியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

The post குண்டாசில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Guntazil ,Rice ,Subramanian ,Sandanam Mahan ,Sivandipatti Karmeganar Street ,Balai ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...