×

லாரி மோதியதில் வாலிபர் பலி

கள்ளிக்குடி, பிப். 10: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பாண்டியராஜன்(20). நேற்று காலை கள்ளிக்குடி அருகே உள்ள மணி நகரில் ஒரு டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு விருதுநகர் – மதுரை நான்கு வழிச்சாலையில் திரும்பி டூவிலரில் செல்லும்போது அதிவேகத்தில் வந்த ஒரு லாரி மோதியது. இதில் டூவீலரில் சென்ற பாண்டியராஜன், இதே பகுதியில் வாட்ச்மேனாக பணிபுரியும் சைக்கிளில் சென்ற மையிட்டான்பட்டி முத்துராஜா(65) இருவர் மீதும் இந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலத்த காயமடைந்த முத்துராஜா விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற லாரியை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

The post லாரி மோதியதில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kallikudi ,Pandiyarajan ,Chandrasekhar ,Nallamanayakanpatti ,Kallikudi, Madurai district ,Mani Nagar ,Virudhunagar-Madurai ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது