×

சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். மலர்களை பயன்படுத்தி மனிதன், மிருகம் உள்ளிட்ட பல்வேறு உருவங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

செம்மொழிப் பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். இந்த பூங்காவை 24 நவம்பர் 2010 ஆம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்தது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செம்மொழிப் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியில் சுமார் 10 லட்சம் மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இருந்து கொண்டு வரப்படும் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒரு வார காலம் வரை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

The post சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai Chemmozhi Park ,Chennai ,Chennai Chemmoshi Park ,Udayaniti Stalin ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...