×

நிவாரணம் கேட்கவில்லை உரிமையை தாருங்கள்: மதுரை எம்பி பதிவு

மதுரை: ‘நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்’ என மதுரை எம்பி தெரிவித்து உள்ளார்.  மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலும், பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளை புரட்டிப் போட்டிருக்கிறது.

விவசாயம், வேலையிழப்பு, கால்நடைகள் இறப்பு, வாழ்விட இழப்பு என உயிரை பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய் வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம். “நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை – எங்களின் உரிமையைத் தாருங்கள்’’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நிவாரணம் கேட்கவில்லை உரிமையை தாருங்கள்: மதுரை எம்பி பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,S.Venkatesan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...