×

டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியாக போக்சோ வழக்கு பதிய மாணவிகளை தூண்டிய 2 பேர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் மீது 3 மாணவிகள் பாலியல் தொல்லை அளித்ததாக 2022-ல் புகார் அளித்தனர். புகார் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தன்மீதான மாணவிகளின் பாலியல் புகாரை ரத்துசெய்யக் கோரி பயிற்சியாளர் தர்மராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Taekwondo ,Dharmarajan ,POCSO ,Dinakaran ,
× RELATED மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி...