×

தேவகோட்டையில் கோயில்,காவலாளி வீட்டில் கொள்ளை முயற்சி

 

தேவகோட்டை, பிப்.8: தேவகோட்டை ரெகுநாதபுரத்தில் பாண்டி முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழக்கம் போல் நேற்று பூஜை செய்துவிட்டு பூசாரி இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். கோயில் பூட்டு உடைந்து இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. தேவகோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலை சுற்றி கடந்த சில தினங்களாக இந்த பகுதிக்கு தொடர்பில்லாத வாலிபர்கள் சுற்றித்திரிந்து கண்காணித்துள்ளனர். உண்டியலில் பெரும் பணம் இல்லை. சிசிடிவி கேமிரா காட்சியின் மூலமாக திருடர்கள் யார் யார் என்பது தெரியவரும்.

தொடர்ந்து மற்றொரு இடமான லெட்சுமிபுரம் மேற்கு தெருவில் சிலம்பனி சிதம்பர விநாயகர் கோயிலுக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. கோயில் காவலாளி சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டார். அவரது மனைவி சௌந்தரம் என்ற சகுந்தலா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டிற்குள்ளேயே ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை திருடர்கள் நான்கைந்து பேர்கள் வீட்டின் மேல் கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருட முயன்றனர். சத்தம் கேட்ட சகுந்தலா யார் யார் என்று கேட்டவுடன், அங்கிருந்து திருடர்கள் தப்பித்து ஓடி விட்டனர். தேவகோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தேவகோட்டையில் கோயில்,காவலாளி வீட்டில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Pandi Muneeswarar Temple ,Devakottai Rekunathapuram ,
× RELATED நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை