×

பாஜ பெண் பிரமுகரை தாக்கிய வழக்கு அமர் பிரசாத் ரெட்டிக்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க ஆட்களை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜ பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக, பாஜ விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் தர் உள்ளிட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அமர் பிரசாத் ரெட்டி முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் வாதிட்டார். இதையடுத்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அமர் பிரசாத் ரெட்டி 10 நாள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, ஆஜராகாவிட்டால் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை மனு செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post பாஜ பெண் பிரமுகரை தாக்கிய வழக்கு அமர் பிரசாத் ரெட்டிக்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Court ,Amar Prasad Reddy ,BJP ,Chennai ,Narendra Modi ,Kelo India Games ,Dinakaran ,
× RELATED நயினாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி...