×

கருணை அடிப்படையில் பணி நியமனம்: அமைச்சர் வழங்கினார்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களின் படைப்பு திறன்களை வெளிக்கொணரும் பொருட்டு 6வது மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் 16 பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும், 57வது மாநில அளவிலான திறன் போட்டிகளில் 6 பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு, சான்றிதழை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் பணியின்போது மரணமடைந்த 9 அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

The post கருணை அடிப்படையில் பணி நியமனம்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Department of Employment and Training ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...