கவுகாத்தி: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கார் டீலர் சந்தீப் குமார் காம்ப்ளே (44). இவருக்கும் கொல்கத்தா விமான நிலையத்தில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் பணியாற்றி வந்த அஞ்சலி ஷா (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டாக தொடர்பு இருந்து வந்தது. அதேநேரம் அஞ்சலி ஷா, பிகாஷ் குமார் ஷா என்பவரை காதலித்து வந்தார்.
‘இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜாலியாக இருந்து வந்தனர். இந்த முக்கோண காதல் விவகாரம் பிகாஷ் குமார் ஷாவுக்கு தெரிய வந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஞ்சலி ஷாவிடம் வலியுறுத்தினார். ஆனால் அஞ்சலியுடன் நெருக்கமாக இருக்கும் படம், வீடியோக்களை வைத்து சந்தீப் குமார் காம்ப்ளே மிரட்டினார்.
அதையடுத்து அஞ்சலி ஷாவும், பிகாஷ் குமார் ஷாவும், சந்தீப் குமார் காம்ப்ளேவை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள ஓர் ஓட்டலுக்கு சந்தீப் குமார் காம்ப்ளேவை வரச் செய்து அங்கு வைத்து சந்தீப் குமாரை தீர்த்து கட்டி விட்டு தப்பினர். காம்ப்ளே கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தப்பியோடிய காதல் ஜோடியை தேடி வந்தனர். அவர்கள் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா நோக்கி செல்வதாக தெரியவந்தது. அதையடுத்து கொல்கத்தா விமான நிலையம் சென்ற போலீசார், காதல் ஜோடியான அஞ்சலி ஷா, பிகாஷ் குமார் ஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
The post ஒரே நேரத்தில் 2 பேருடன் நெருக்கம் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய காதலனை தீர்த்து கட்டிய காதலி: விமானத்தில் தப்ப முயன்ற போது இன்னொரு காதலனுடன் கைது appeared first on Dinakaran.