×

அமலாக்கத்துறை சம்மனை 5 முறை புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்… பிப்.17ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆணை!!

டெல்லி : அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்.17-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், துணை முதல்வராக இருந்த சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபரில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஆஜராகாமல் வந்ததற்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்.17-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மற்றொரு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப் 29-ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 மே 6-ல் யூடியூபர் துருவ் ரவி, பாஜகவுக்கு எதிராக வெளியிட்ட வீடியோவை கெஜ்ரிவால் பகிர்ந்திருந்தார். தவறான தகவல்களை சித்தரித்து வெளியிட்ட வீடியோவை கெஜ்ரிவால் பகிர்ந்ததாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆஜராக அனுப்பிய சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 29-ம் தேதி நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை சம்மனை 5 முறை புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்… பிப்.17ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,Delhi, Sisodia ,CBI ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை...