×

கூடலூர் அருகே மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டம்: இரவு நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதாக மக்கள் புகார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தர் வயல் பகுதியில் புகுந்துள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் ஊருக்குள் வந்து வீடுகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர்.

வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினாலும் ஓரிரு நாட்களில் அவை மீண்டும் ஊருக்குள் புகுந்து தொல்லை தருவதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படும் முன் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் வனத்துறையை அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post கூடலூர் அருகே மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டம்: இரவு நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதாக மக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiris ,Gudalur ,Kothar ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...