×

12ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

 

திருவாரூர், பிப். 7: திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 12ம் தேதி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 12ந் தேதி நடைபெறவுள்ளது.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் கழகம் திருவாரூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்யஉள்ளனர். எனவே, இம்முகாமில் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தினை நேரிலும், 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post 12ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Vocational Admission Camp ,Tiruvarur ,Collector ,Saru ,vocational training camp ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...