×

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவோம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

புதுக்கோட்டை: தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: இலங்கை அரசாங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையை கூர்ந்து பார்த்து, கடந்த மாதம் இலங்கை தூதகரத்தில் இருந்து அந்நாட்டு ஆளுநரை அனுப்பி, முதல் முதலாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து அந்நாட்டு அரசு, குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள், இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரும். இலங்கை தமிழர் மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கு அரசு அனுமதி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தருவோம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senji Mastan ,Pudukottai ,Tamil Nadu ,Sri Lankan government ,Chief Minister of Tamil Nadu ,Sri ,Lankan ,Sri Lanka ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...