×

வீட்டின் பூட்டு உடைத்து 4 சவரன், பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை ஆரணி அருகே பட்டப்பகலில் துணிகரம்

ஆரணி, பிப்.7: ஆரணி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து 4 சவரன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் ஊராட்சி கன்னிக்கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி இந்திராணி(68), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதேபகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணியின் கணவர் இறந்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும், இந்திராணி தனது சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிக் கொண்டு நேற்று வெளியில் சென்றுள்ளார். பின்னர், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் மற்றும் சுமார் ₹5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் தேவிபிரியா வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரித்தார். இதுகுறித்து, இந்திராணி ஆரணி தாலுகா போலீசில் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகை, பணம் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டு உடைத்து 4 சவரன், பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை ஆரணி அருகே பட்டப்பகலில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : 4 ,Sawaran ,Arani ,Munusamy ,Kannikoil Street, Rattinamangalam Panchayat, Tiruvannamalai District ,Sawarans ,Dinakaran ,
× RELATED ஆரணியில் அக்னி வசந்த விழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த 4 பெண்கள் காயம்