×

மறைமலைநகரில் விசிக உறுப்பினர் சேர்ப்பு முகாம்: திருமாவளவன் பங்கேற்பு

செங்கல்பட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி மறைமலைநகரில் மாவட்ட செயலாளர் தென்னவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மறைமலைநகர் கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த 250 பேருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்பு செய்தியாளரிகளிடம் அவர் பேசுகையில், ‘‘அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளித்தது குறித்து கூறுகையில், ‘சமூக நீதி காவலர் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தவர் அத்வானி. ஓபிசி மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடதுக்கீடு வழங்க கூடாது என வன்முறையை தூண்டியவர்.

ரதயாத்திரை என்ற, பாபர் மசூதி இடிப்பதற்கு முதல் முழு காரணமாக இருந்தவர் அத்வானி. இந்தியாவில் வெறுப்பு அரசியல் தீவிரமாக வளர்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர். இன்று மோடி, அமித்ஷா கோலோச்சுவதற்கு அடிக்காரணமாக இருந்தவர், இந்தியா முழுவதும் மத அரசியலை பரவச்செய்து அரசியல் ஆதாயம் தேடியவர் இப்படிபட்ட சாதனைகளுக்காக பாரத ரத்னா வழங்கபட்டடுள்ளது. இந்த விருது பாஜவை பொருத்தவரை பொருத்தமானதாக இருக்கும், ஆனால் ஜனநாயக சக்திகளால் இதனை ஏற்க முடியாது. இந்தியாவில் மதசார்பின்மை கொள்கைக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகபெரும் ஆபத்தை ஏற்படுத்தியவர், அதற்கு எதிரான உளவியலை கட்டமைத்தவர் அத்வானி அவருக்கு பாரத ரத்னா விருது அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

The post மறைமலைநகரில் விசிக உறுப்பினர் சேர்ப்பு முகாம்: திருமாவளவன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiramamalainagar ,Thirumavalavan ,Chengalpattu ,Việtịnh Siruthaal Party ,District ,Thennavan ,Chiramalai Nagar ,Liberation Tigers Party ,T. Thirumavalavan ,Kooduvancheri ,Katangulathur ,Thirmamalainagar ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...