×

குடவாசல் கடைவீதியில் பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்காவிட்டால் போராட்டம்

 

வலங்கைமான், பிப்.6: குடவாசல் பேரூராட்சி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த கழிவறையை பேரூராட்சி நிர்வாகம் பூட்டியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட குடவாசல் கடைவீதியில் உள்ள இலவச கழிவறையை 30 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள்,பொதுமக்கள் இயற்கை உபதியை கழிப்பதற்காக பயன்படுத்தி வரும் இலவச கழிப்பறை தற்போது பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், பொதுமக்கள் இதனால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சுட்டிக்காட்டி குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் உடனே இலவச கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவே வேண்டும் என சிபிஎம் நகரக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஎம் நகர குழு சார்பாக மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும் என குடவாசல் சிபிஎம் நகரக்குழு செயலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

The post குடவாசல் கடைவீதியில் பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்காவிட்டால் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Gudavasal shopping street ,Valangaiman ,Kudavasal ,Tiruvarur District ,Gudavasal Municipal Corporation ,Gudavasal Market Street ,30 ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு