×

தென்திருப்பதி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

மேட்டுப்பாளையம், பிப்.6: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் மாதையன் லே – அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). இவருக்கு மனைவியும், மௌலிகா (25) என்ற மகளும் உள்ளனர். சந்திரசேகர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி சந்திரசேகர் பணி நிமித்தமாக தனது பைக்கில் தென்திருப்பதி சென்றுள்ளார். பணி முடிந்த பின் தென்திருப்பதியில் இருந்து ஜடையம்பாளையம்புதூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய சந்திரசேகர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தென்திருப்பதி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி appeared first on Dinakaran.

Tags : South Thirupati ,Mettupalayam ,Chandrasekhar ,Matayan ,Mahadevapuram, Mettupalayam ,Maulika ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...