×

கிணறு வெட்டும் போது தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி பலி

தர்மபுரி, பிப்.6: தர்மபுரி அடுத்த மொரப்பூர் ஒபிலிநாயக்கனஅள்ளி முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன்(40). இவருக்கு அம்சா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சிவராமன் கிணறு வெட்டும் தொழில் செய்துவந்தார். கடந்த ஒரு மாதமாக மொரப்பூர் பாலசமுத்திரம் கிராமத்தில், கிணறு ஒன்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம், கம்ப்ரசர் மூலமாக கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது, கிணற்றுக்குள் இருந்த அவரது தலையின் மீது பாறாங்கல் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிவராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணறு வெட்டும் போது தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sivaraman ,Morapur Obilinayakanaalli Muthanur ,Amsa ,Balasamuthram ,Morapur ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி