×

ராஜாக்கமங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம், பிப். 6: ராஜாக்கமங்கலம் கீழ சட்டுவன் தோப்பில் தேவி முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தங்கத்துரை என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரவு கோயிலை பூட்டிவிட்டு தங்கத்துரை வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை 6.30 மணி அளவில் வந்து பார்த்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்தது. சுமார் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். அதில் கணபதிபுரம் ஆலங்கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த மகேஷ்(39) என்பவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மகேஷை கைது செய்தனர்.

The post ராஜாக்கமங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Devi Mutharamman Temple ,Chattuvan Grove ,Thangathurai ,Rajakkamangalam ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது