×

4 தலைமுறையுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே காளிகாதேவி அம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பாப்பம்மாள். இவர் 1924ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 6 மகள்கள், 2 மகன்கள். சுமார் 60க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் என 4 தலைமுறைய சேர்ந்த குடும்ப உறவுகள் உள்ளனர். பாட்டியின் 100வது பிறந்தநாளையொட்டி ரூபாய் நோட்டுகளை மாலையாக பாட்டிக்கு அணிவித்தும், வீதியில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

The post 4 தலைமுறையுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Pappammal ,Kalikadevi Amman Koil Street ,Bus Stand ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...