×

கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல் 2 பேர் பலி

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, மங்களூரு ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 15 நாளில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

The post கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mangaluru ,Karnataka ,Chikkamagaluru ,
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்