×

அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கேரளா: அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ED, CBI, Income Tax போன்ற ஏஜென்சிகள், பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க ஆயுதம் ஏந்தியிருக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தரோ, பேராசிரியரோ, பொதுத் துறை பிரிவுகளில் இயக்குநர்களாகவோ இருந்தாலும், RSS மற்றும் BJP உடனான நெருக்கத்தின் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் அல்லாமல், பல்வேறு உயர் பதவிகளில் ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். ஜனநாயகம், நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றின் மதிப்புகளைப் பாதுகாக்க இந்த அச்சுறுத்தலை நாம் அடையாளம் கண்டு எதிர்க்க வேண்டும். காங்கிரஸின் கரம் உங்களுடன் உள்ளது, நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக போராடி நீதி வழங்குவோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : Congress ,President ,Mallikarjuna Kharge ,Kerala ,ED ,CBI ,Income Tax ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...