×

மனைவியை பார்க்க பரோலில் வந்த ஆயுள் கைதி ‘எஸ்கேப்’

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உடல்நலம் பாதித்த மனைவியை பார்க்க பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் வேதநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). இவரது மனைவி இசக்கியம்மாள். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சந்திரசேகர் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு தனது 2 வயது மகனை கொலை செய்து தனது வீட்டருகே புதைத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2020ம் ஆண்டுசந்திரசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சந்திரசேகர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இசக்கியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனைவியை பார்ப்பதற்காக சந்திரசேகர் பரோலுக்கு விண்ணப்பித்தார்.

சிறை நன்னடத்தை அலுவலர் அறிக்கைப்படி, சந்திரசேகருக்கு கடந்த ஜன. 25ம் தேதி முதல் ஆறு நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்து பிப்.1ம் தேதி சிறையில் ஆஜராக வேண்டிய சந்திரசேகர் தலைமறைவானார். மதுரை மத்திய சிறை அலுவலர் முனீஸ் திவாகர் அளித்த புகாரில், தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்திரசேகரை தேடி வருகின்றனர்.

The post மனைவியை பார்க்க பரோலில் வந்த ஆயுள் கைதி ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Escape ,Rajapalayam ,Chandrasekhar ,Thalavaipuram Vedanayakapuram ,Rajapalayam, Virudhunagar district ,Ishakiyammal ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்