×

லோகேடோ ஆப் மூலம் வடபழனியில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 2 இளம் பெண்கள் மீட்பு

சென்னை: லோகேடோ ஆப் மூலம் வடபழனியில் உள்ள குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த பிரபல புரோக்கரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை வடபழனியில் ஆன்லைன் மூலம் ‘லோகேடோ’ செல்போன் செயலி மூலம் இளம் பெண்கள் புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணிக்கு உதவி கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி, போலீசார் லோகேடோ செயலி மூலம் தலைமை காவலர் குமார் என்பவர் மூலம் பாலியல் புரோக்கரிடம் பேசினர். அப்போது அந்த புரோக்கர், அழகான இளம் பெண்கள் புகைப்படங்கள் அனுப்பினர். அதன்படி வடபழனி பஜனை கோயில் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையில் 3 ஆயுதப்படை பெண் காவலர்கள், 2 ஆண் காவலர்களுடன் புரோக்கர் கூறிய சம்பவ இடத்திற்கு நேற்று மாலை அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.

அப்போது, 2 இளம் பெண்களை வைத்து புதுக்கோ்டை ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் மணிவண்ணன்(31) மற்றும் சேலம் அம்மாபேட்டை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த இளவரசன்(30) ஆகியோர், லோகேடோ பாலியல் செயலி மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே பாலியல் புரோக்கர் மணிவண்ணனை அதிரடியாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் ைகது செய்தனர். அவரிடம் ஈருந்து 2 இளம் பெண்கள் மீட்டகப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உகள்ள இளவசரனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post லோகேடோ ஆப் மூலம் வடபழனியில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 2 இளம் பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,CHENNAI ,Chennai Vadapalani ,
× RELATED சொத்து பிரித்து கொடுக்க சொல்லி வயதான...