×

மாடியில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

பாப்பாக்குடி, பிப்.4: முக்கூடல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி பெருமாள்கோயில் தெரு புதுக்கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் (47). ஆட்டோ டிரைவரான இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். முதல் தள வேலை முடிந்த நிலையில் மாடியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மகாராஜனும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மகாராஜன் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாப்பாக்குடி போலீசார் மகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடியில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Pappakkudi ,Mukoodal ,Maharajan ,Pappakudy Perumalkoil Street Pudukram ,Mukodal ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார்