×

பணம் கொடுக்கல், வாங்கலில் கொலை குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி, பிப். 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டை செல்லும் சாலையில் கீரனூர் கிராம பகுதியில் விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த செம்மலை மகன் சிவா(33) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திருக்கோவிலூர் தெப்பக்கள தெருவை சேர்ந்த சேகர் மகன் பரணி (எ) பரணிதரன்(29) என்பவர் சென்னையை சேர்ந்த 3 நண்பர்களின் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்ததையடுத்து 4 பேரும் திருக்கோவிலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றவாளியின் செய்கை பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும் இவர் பிணையில் வெளியே வந்தால் தொடர்ந்து பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்கமான வகையில் இதே போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடும் என்பதாலும் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி(பொறுப்பு) தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில் பரணிதரணை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பரணிதரனை கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post பணம் கொடுக்கல், வாங்கலில் கொலை குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Semmalai ,Siva ,Bhilrampattu ,Villupuram district ,Tirukovilur ,Kallakurichi district ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...