×

தரிசு நிலத்தில் பற்றி எரிந்த தீ

 

போச்சம்பள்ளி, பிப்.4: போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் கிராமத்தில், தரிசு நிலத்தில் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. துணி வியாபாரியான இவர், தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யாமல் கரம்பு காடாக வைத்துள்ளார். இந்த நிலத்தில் மழைக்கு களைச்செடிகள் வளர்ந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இங்குள்ள மரம், செடிகள் காய்ந்துள்ளது.

இந்நிலையில் காவேரிப்பட்டணம் – மத்தூர் சாலையில் சென்றவர்கள், சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் தூக்கி சாலையோரம் வீசிச்சென்றுள்ளனர். இதனால் சருகுகளில் தீப்பற்றி காய்ந்த செடிகள், மரக்கிளைகளிலும் தீப்பற்றிக்கொண்டது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தீ கொளுந்து விட்டு எரிவதை கண்ட பொதுமக்கள், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post தரிசு நிலத்தில் பற்றி எரிந்த தீ appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Athikanur ,Subramani ,Bochampalli ,Dinakaran ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை