×

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி, பிப்.4: புதிய தொழிற் பள்ளிகள் துவங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2024-2025ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

02.01.2024 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.2024-2025ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தொழிற்பள்ளி விண்ணப்பிக்கும் பொருட்டு 29.2.2024 நள்ளிரவு 11.59 மணி வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri ,District ,Collector ,Aruna ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்