- அண்ணா நினைவு தினம்
- மாநகர மாவட்டம் மதிமுக
- கோயம்புத்தூர்
- கோவை மாவட்டம் மதிமுக
- அண்ணா
- வி.கே.கே.மேனன் சாலை, காந்திபுரம்
- பெருநகர மாவட்டம்
- கணபதி செல்வராஜ்
கோவை, பிப். 4: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா 55-வது நினைவுதினம் காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி.நந்தகோபால், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் பயனிர் தியாகு, சித்ரா தங்கவேலு, பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, அன்பு என்கின்ற தர்மராஜ், பொ.சு முருகேசன், எல்.லூயிஸ், மு.ராமநாதன், வெ.சு.சம்பத், குறிச்சி செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.விஜயகுமார், பேங்க் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.ராமச்சந்திரன், கே.எம்.ஷாஜகான், ப.சதீஷ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, ச.கோவிந்தராஜ், குனிசை சண்முகம், பழையூர் கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜீவ்குமார், பொறியாளர் ராஜன், சுஜிதா தர்மராஜ், த.சிவசங்கர், காந்தாமணி, சரவண பிரகாஷ், ஜிஜேந்திரன், அர.சவுரிராஜன், மு.சுப்ரமணியகிருஷ்ணன், கா.ஆதித்யா, து.சுரேந்திரன், கோவை முரளி, வாசுதேவன், ப.அருணகிரி, கரூர் மணி, பாலசுந்தரம், எல்.ஜி.பி.முருகேசன், கணபதி துரைராஜ், முரளி, வீரபாண்டி வேலு, பாண்டியன், ப.ராமச்சந்திரன், அரவிந்த்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.