×

பிரபல ரவுடி குண்டாசில் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை சின்னதெருவைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் தணிகா (எ) தணிகைவேல் (41). மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான இவர் மீது, காஞ்சிபுரம் தாலுகா, பாலுசெட்டிச்சத்திரம், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த தணிகாவை, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பரிந்துரையின்பேரில் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இவர், ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி தணிகைவேலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பிரபல ரவுடி குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Gundasil ,Kanchipuram ,Tanika (A) Thanikaivel ,Mani ,Chinnatheru, ,Panchupet, Kanchipuram ,Sridhar ,Kanchipuram taluka ,Baluchetichattaram ,Sivakanchi ,Vishnukanchi ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...