டெல்லி: டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி ஜெக்ரிவாலுக்கு 5வது முறையாக நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் கெஜ்ரிவால் ED சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். 7 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கை காரணம் காட்டி தன்னை கைது செய்ய பாஜக அரசு முயற்சி எனவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் 2 வது நாளான இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.