×

நாகர்கோவில் ஒழுகினசேரியில் சாலை மூடல் குறுகிய சாலைகளில் சிக்கி திணறும் வாகனங்கள்

*கடும் போக்குவரத்து நெருக்கடியால் தொடரும் அவதி

நாகர்கோவில் : நாகர்கோவில் ஒழுகினசேரி வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், வடசேரியை சுற்றி உள்ள குறுகிய சாலைகளில் சென்று வாகனங்கள் சிக்கி திணறி வருகின்றன.கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்ைத இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுகினசேரி நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன.

ஒழுகினசேரி வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்தும் வடசேரி அசம்பு சாலை, புத்ேதரி நான்கு வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் அசம்பு ரோடு வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி சந்திப்பு முதல் வடசேரி எம்.ஜி.ஆர் சிலை சந்திப்பு வரை குறுகலான சாலையாகும். இதன் வழியாக அனைத்து வாகனங்களும் செல்வதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர் சிலை முதல், எஸ்.எம்.ஆர்.வி சந்திப்பு வரை 5 இடங்களில் டிராபிக் போலீசார், குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சாலையில் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். ஆனாலும் நெருக்கடி தீர்ந்த பாடில்ைல.இந்த நெருக்கடியை சமாளிக்க இருச்சக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி வடசேரி ஆறாட்டு ரோடு வழியாக செல்கின்றன. இதே போல் சோழராஜா கோயில், வடசேரி வெள்ளாளர் கீழ தெரு, கிருஷ்ணன்கோவில் விஏஓ ஆபீஸ் – சிபிஎச் ரோடு என குறுகிய சாலைகளில் சென்று வருகின்றன. நேற்று காலையிலும் இந்த குறுகிய சாலைகளில் பைக்குகள், ஆட்டோக்கள், கார்கள் சென்றன.

இதனால் நெருக்கடி கடுமையாக இருந்தது. குறிப்பாக பள்ளி வேன்கள், ஆட்டோக்கள் அதிகளவில் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. வடசேரி எஸ்எம்ஆர்வி சந்திப்பு முதல் ஆறாட்டு ரோடு வழியாக சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் வரை சிக்கி திணறின. இதே போல் அசம்பு ரோட்டிலும் கடுமையான நெருக்கடி இருந்தது. வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் திரும்ப வேண்டிய பஸ்கள், வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறின.

இதனால் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் இருந்து வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு வரை வாகனங்கள் நின்றன. இதே வடசேரி அசம்பு ரோட்டில் புத்தேரி மேம்பாலம் வரை வாகனங்கள் சிக்கி நீண்ட வரிசையில் நின்றன. பெரும் சிரமத்துக்கு இடையே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்.அசம்பு ரோடு மற்றும் வடசேரியை சுற்றி உள்ள சாலைகளில் ஏற்பட்ட நெருக்கடியால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்படைந்தனர்.

நாகர்கோவிலில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு வர வேண்டிய மாணவ, மாணவிகள் சரியான நேரத்துக்கு வர முடியவில்லை. இதே போல் நாகர்கோவிலில் இருந்து இறச்சக்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

நீரூற்றால் சிக்கல்

ஒழுகினசேரி பகுதியில் 20 நாட்கள் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒழுகினசேரி பகுதியில் நடந்து வரும் ரயில்வே பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பில்லர் அமைக்க தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் ஊற்று அதிகரித்துள்ளது. இதனால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன. தண்ணீர் ஊற்று அதிகரித்து வருவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

The post நாகர்கோவில் ஒழுகினசேரியில் சாலை மூடல் குறுகிய சாலைகளில் சிக்கி திணறும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil Oluginassery ,Avadi Nagercoil ,Vadaseri ,Kanyakumari ,Thiruvananthapuram ,
× RELATED வடசேரியில் முன் அறிவிப்பின்றி மறியல் 30 பேர் மீது வழக்கு