×

வடசேரியில் முன் அறிவிப்பின்றி மறியல் 30 பேர் மீது வழக்கு

தோகைமலை, மார்ச் 30: தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி வடசேரி 3 ரோடு பேருந்து நிறுத்தம் அருகே, வடசேரியில் குடிநீர் வரவில்லை என்ற காரணத்திற்காக எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்து உள்ளனர். இதனை அடுத்து எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வடசேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்த சங்கப்பிள்ளை, பாலசுப்ரமணி, வேலு, கதிர்வேல், தங்கவேல், ரம்யா, உஷா உள்பட 10 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 30 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடசேரியில் முன் அறிவிப்பின்றி மறியல் 30 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Utassery ,Dokaimalai ,Vadaseri Uratchi Vadaseri 3 Road ,Vadaseri ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்