×

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதல்..கத்தி முனையில் பொருட்கள் கொள்ளை..!!

நாகை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழியமும் அதிகரித்துள்ளது. மீன் படிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுதுறையில் இருந்து ராமன், பொன்னுதுரைக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கத்தி முனையில் மிரட்டி மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வேதாரண்யம் மீனவர்களின் புகாரை அடுத்து மீன்வளத்துறை, கடலோர காவல் குழும போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதல்..கத்தி முனையில் பொருட்கள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Pirates Atrocity Attack on Nagai Fishermen ,Nagai ,Tamil Nadu ,Sri Lankan Pirates Atrocity ,Nagai Fishermen ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...