×

மாவட்ட தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவி வெற்றி

 

மோகனூர், பிப்.3: பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. அதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், நின்ற இடத்தில் இருந்து குதித்தல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் முதலிடம் பிடித்தார்.

அதே போல் மாணவி சந்தியா, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100 மீ, 200 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் 2ம் இடமும், சோபனபிரியா 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்தனர். மேலும், குண்டு எறிதல் போட்டியில் 2ம் இடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுடரொளி, சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வனிதா உள்ளிட்டோர் பாராட்டினர்.

The post மாவட்ட தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Moganur ,Department of ,Namakkal ,Mohanur Government ,Dinakaran ,
× RELATED பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு...