- வடமதுரை
- சென்னை
- சின்னதுரை
- வடமதுரை சொசைட்டி தெரு, திண்டுக்கல் மாவட்டம்
- திண்டுக்கல் மேற்கு போலீஸ்
- நிலையம்
- சூரத்
- தின மலர்
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சொசைட்டி தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான கார் வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கார் நேற்று முன்தினம் பகல் 12:29க்கு சென்னை அருகேயுள்ள சூரப்பட்டு டோல்கேட்டை கடந்ததாக கூறி, கட்டணம் கழிக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது. இதை கண்ட சின்னத்துரை மிகவும் குழப்பமடைந்தார். உடனே அவர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்துக்கும், வடமதுரை காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தார். இதுபோல் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வரும் டோல்கேட்களை கடக்காமல் இருக்கும் வாகனங்களுக்கு வசூல் செய்வது தொடர்கதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
The post கார் நிற்பது வடமதுரை.. வசூல் சென்னை டோலில்… போலீஸ் ஏட்டு அதிர்ச்சி appeared first on Dinakaran.