×

கேரளாவின் வயநாட்டில் நேர்ந்த விபரீதம்: வயநாடு புலிகள் வனசரகத்தில் காட்டு யானை துரத்தியதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி

கேரளா: கேரளாவில் காட்டு யானையிடம் சிக்கிய சுற்றுலா பயணி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வயநாடு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற போது பந்திப்பூர் புலிகள் வனசரகத்தில் பயணிகளை காட்டு யானை ஒன்று துரத்தி வந்தது. அதில் நிலைதடுமாறி விழுந்த பயணியை யானை காலால் மிதித்து கொள்ள முயன்றது.

நல்வாய்ப்பாக அப்போது சரக்கு வாகனம் ஒன்று அப்போது சாலையின் எதிர்புறம் வந்ததால் யானையின் கவனம் திசை திரும்பியது. இதனால் கீழே விழுந்த அந்த பயணி தவழ்ந்து சென்று நூலிழையில் உயிர்தப்பினார். வனப்பகுதியில் பயணிகள் எதை செய்யக்கூடாது என்பதை உயர்த்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

The post கேரளாவின் வயநாட்டில் நேர்ந்த விபரீதம்: வயநாடு புலிகள் வனசரகத்தில் காட்டு யானை துரத்தியதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bandipur ,Wayanad district ,Wayanad, Kerala ,Wayanad ,
× RELATED புலி தாக்கி யானை சாவு