×

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொடூர தந்தை கைது சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

 

சேத்துப்பட்டு, பிப்.2: சேத்துப்பட்டு அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது ெகாடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள கிராமத்ைதச் சேர்ந்தவர் பாண்டியன்(38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீர்த்தி. தம்பதிகளுக்கு 10, 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீர்த்தி, கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களது 2 மகள்களும் திண்டிவனத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் பாண்டியன், மகள்களை தனது வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கமாம். அதன்படி, பொங்கல் விடுமுறைக்காக 2 மகள்களையும் பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வந்தாராம். அப்போது, 10 வயது மகளை பாண்டியன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் செஞ்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றபோது, தந்தையினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, மகள் கீர்த்திக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கீர்த்தி திருவண்ணாமலை கலெக்டர், எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரபாவதி நேற்று முன்தினம் பாண்டியனிடம் விசாரணை நடத்தினார். மேலும், சிறுமியிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து காமக்கொடூரன் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொடூர தந்தை கைது சேத்துப்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chetupatta ,Pandian ,Sethupattu, Thiruvannamalai district ,Sethupattu ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்