×

காக்களூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

 

திருவள்ளூர், பிப். 2: திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பொதுகுழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ், திமுக நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராமச்சந்திரன், சீனிவாசன், சௌந்தரராஜன், ஒன்றிய கவுன்சிலர் டி.கே.பூவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் த.சுகுமார், ஸ்ரீதர், சங்கர், பிரபு, சிவா பிரகாஷ், சதீஷ் , எம்.கார்த்தி, மதன், விக்கி, ஜெயபாலன், கதிரவன், வேலு தம்பி, முருகன், பாலாஜி, செந்தில், பரதன், எட்டிப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் சு.ஜெகதீசன் நன்றி கூறினார்.

The post காக்களூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kakalore Govt Higher Secondary School ,MLA Thiruvallur ,Government Higher Secondary School ,Kakaloor Panchayat, ,Tiruvallur ,Union ,Union Committee ,President ,Jayaseeli Jayapalan ,Kakalore Government Higher Secondary School ,MLA ,Dinakaran ,
× RELATED ஏற்காடு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி