×

சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை திமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: மக்களவை தேர்தலுக்காக அயராது உழைக்க வலியுறுத்தல்

சென்னை: சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. 7வது நாளாக நேற்று காலை சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. குழுவை சேர்ந்த அமைச்சர்கள் ேக.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் 2 தொகுதி மாவட்டங்களின் அமைச்சர்கள்- மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்களிடம் தொகுதியில் நடைபெற்று வரும் கட்சிப்பணி-மக்கள் பணிகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். களத்தில் இருந்து வருகிற அத்தகைய தகவல்கள் முக்கியமானவை என்றும், அதனை தலைவரிடம் எடுத்துரைப்போம் என குழுவினர் தெரிவித்தனர்.மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மாலையில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. இதில் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

 

The post சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை திமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: மக்களவை தேர்தலுக்காக அயராது உழைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Mayiladuthurai ,Nagai ,Thanjavur ,DMK ,Lok Sabha ,CHENNAI ,DMK Election Coordination Committee ,Nagapattinam ,DMK Parliamentary Election Oversight and Coordinating Committee ,Constituency Wise ,Anna University ,Tanjore ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மேலைச் சிதம்பரம்