×

தோஷகானா பரிசு பொருள்கள் ஊழல் வழக்கில் பாக். மாஜி பிரதமர் இம்ரான்கான், மனைவி புஷ்ராவுக்கு 14 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத்: தோஷகானா பரிசு பொருள்கள் மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான்(71) மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரதமராக இருந்த போது அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் நேற்றுமுன்தினம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தோஷகானா பரிசு பொருள்கள் மோசடி தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.78.70 கோடி அபராதம் விதித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள இம்ரான், அவரது மனைவி ஆகியோர் 10 ஆண்டுகளுக்கு எந்த பதவியும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை தங்களது சொத்துக்களாக கருதி விற்பனை செய்தனர் என இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தோஷகானா பரிசு பொருள்கள் ஊழல் வழக்கில் பாக். மாஜி பிரதமர் இம்ரான்கான், மனைவி புஷ்ராவுக்கு 14 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Pak ,Toshakana ,Former ,Imran Khan ,Bushra ,ISLAMABAD ,Pakistan ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்