×

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜன.16-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : court ,Sri Lanka ,Colombo ,Tamil Nadu ,Sri Lankan Navy ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...